Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனியார் நிதி நிறுவனம் மோசடி செய்ததாக கூறி பெண்கள் முற்றுகை

மார்ச் 03, 2019 12:52

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனமான ராயல் அக்ரோ டைரி என்கிற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.  

அச்சரப்பாக்கம் சுற்றியுள்ள அம்மனம்பாக்கம், உத்தமநல்லூர், பள்ளிப்பேட்டை, வெங்கடேசபுரம் காந்திநகர் என 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த நிதி நிறுவனத்தில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் மாதம் 500 ரூபாய் என சேமி கணக்கு தொடங்கி உள்ளனர்.  

இந்த சேமிப்பு கணக்கில் 5 ஆண்டுகள் கழித்து கூடுதல் வட்டி தொகை சுமார் 45 ஆயிரம் வழங்கும் என கூறி ஆரம்பிக்கப்பட்ட இந்த மாதாந்திர சீட்டில் 5 ஆண்டுகள் முடிந்து சுமார் ஆறு மாத காலத்திற்கு மேலாக முடிவுற்ற நிலையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. 

எனவே ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் இன்று தனியார் நிதி நிறுவனத்தை 700க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை இட்டனர் இந்த நிதி நிறுவன மோசடி குறித்து நிறுவனம் மீது அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்